தமிழக செய்திகள்

இரு தரப்பினர் மோதல்18 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதிய சம்பவத்தில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் பிரகாஷ் (வயது 35). இவரது குடும்பத்தினருக்கும் இதே ஊரை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிவகுமார் (25) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவலிங்கம், சிவசங்கர், சிவகுமார், ராகுல் உள்பட 8 பேர் மீதும், அதேபோல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, பிரகாஷ், பெரியசாமி, பாலு உள்பட 10 பேர் மீதும் தனித்தனியே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்