தமிழக செய்திகள்

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காய்கறி வேனை துரத்திய காட்டு யானை

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காய்கறி வேனை துரத்திய காட்டு யானை

தினத்தந்தி

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் இரவு நேரத்தில் காட்டைவிட்டு வெளியேறும் யானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றன.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக கர்நாடகாவுக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பார்த்ததும் யானை அதனை துரத்தி சென்றது. பின்னர் வேனின் பின்னால் கட்டப்பட்டிருந்த கயிற்றை துதிக்கையால் இழுக்க முயன்றது. மேலும் மூட்டைகளையும் இழுத்து காய்கறியை தின்க முயற்சித்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட வேன் டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றுவிட்டார். இதனால் யானைக்கு எதுவும் சிக்கவில்லை. ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்