தமிழக செய்திகள்

மாணவர்களை விரட்டிய காட்டு யானை... பதறி ஓடிய குழந்தைகள் - நீலகிரியில் பரபரப்பு

காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை ஒற்றை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோடமுலா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், நேற்று காலை வழக்கம்போல் தங்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது அவர்களை காட்டு யானை விரட்டியதால் ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து அந்த காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து