தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே பில்லூர் காலனியை சேர்ந்தவர் திருப்பதி மகன் ஜீவா (வயது 24). இவர் கடந்த 5.3.2019-ம் ஆண்டு காகுப்பம் பகுதியைச்சேர்ந்த ஏழுமலை மகள் தீபா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் தீக்ஷா என்ற குழந்தை உள்ளது. ஜீவா, தற்போது சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தீபா, பில்லூரில் உள்ள அவரது கணவர் வீட்டில் இரும்புக்குழாயில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தீபாவின் தாய், அருணா, தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகளிடம் அவரது கணவர் ஜீவா, மாமனார் திருப்பதி, மாமியார் கவிதா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்