தமிழக செய்திகள்

கொசுவர்த்தி ஏற்றிவைத்து தூங்கிய வாலிபர் தீயில் கருகி உயிரிழப்பு...!

கொசுவர்த்தி ஏற்றிவைத்து தூங்கிய வாலிபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது

தினத்தந்தி

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 23). இவர் ஆன்லைன் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டில் கொசுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு தனது தாயின் புடவையை போர்த்தி கொண்டு தூங்கியுள்ளார். இதற்கிடையே நள்ளிரவில் கொசுவர்த்தி சரிந்து புடவையின் மீது பட்டு தீப்பற்றி கொண்டதில் ஜெகதீஷ் உடலில் தீ மள மளவென பரவியது.

தீக்காயங்களுடன் அலறிய ஜெகதீசை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ஜெகதீஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கொசுவர்த்தி வாலிபர் உயிரை பரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்