தமிழக செய்திகள்

விருத்தாசலத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

விருத்தாசலத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

விருத்தாசலம், 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கேவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதியில் சம்பவத்தன்று பெண் ஒருவர்சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்பேது அங்கு வந்த ஒருவர், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண், நகையை கையில் கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்த விருத்தாசலம் குற்றப்பிரிவு பேலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் அரியலூர் மாவட்டம், ஓடையூர் காலனி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்