தமிழக செய்திகள்

பாவூர்சத்திரம் கோவில்களில் ஆடிப்பூர விழா

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் ஆகியவை அம்மனுக்கு படைத்து, சிறப்பு தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலிலும் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சாயரட்சை, அம்பாளுக்கு வளைகாப்பு ஆகியன நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்