தமிழக செய்திகள்

ஆவின் 'டிலைட்' 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்

ஆவின் 'டிலைட்' என்ற 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மழைக்காலம் என்றால் தண்ணீர் தேங்குவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில், இது போன்ற காலங்களில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பால் 500 மி.லி பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை