தமிழக செய்திகள்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

வீரவநல்லூர் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட வீரவநல்லூர் கடையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் சேரன்மாதேவி கோர்ட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கார்த்திக் ராஜாவை வீரவநல்லூர் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறவேற்றினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து