நெல்லை அருகே மானூர் போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு விபத்து வழக்கில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாலாஜி என்ற பாலாஜி சுந்தரத்தை (வயது 37) கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்துவந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று அவரை மானூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.