தமிழக செய்திகள்

கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் திருட்டு

கொடுங்கையூரில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் நகை - பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஜெகதீஷ். ஏ.சி. மெக்கானிக்கான இவர், வியாசர்பாடி சஞ்சய் நகர் எம்.பி.எம். தெருவில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். தன்னுடைய தம்பி ஜோசப் என்பவருடன் இந்த கடையை நடத்தி வந்தார். ஜெகதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஜோசப் மட்டும் கடையை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோசப் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றபோது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்