தமிழக செய்திகள்

நிதி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது உறுதி: பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம்

சென்னை ஐஎஃப்எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை ஐஎஃப்எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் டிஎஸ்பி கபிலன் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்