தமிழக செய்திகள்

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலி

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி பொன்னாரம் பட்டியைச் சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 45). வக்கீலான இவர், தாம்பரம் பகுதியில் தனது நண்பரை பார்த்து விட்டு தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

அதேபோல் குரோம்பேட்டை புருஷோத்தம் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (42). தச்சுத்தொழிலாளியான இவர், உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதி பலியானார்.

இதேபோல ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியானார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் வக்கீல் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்