ராமேசுவரம்,
டெல்லியை சேர்ந்தவர் மீனாட்சி பகுஜா (வயது 45). இவர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வருவதற்காக ராமேசுவரத்திலிருந்து கடந்த 1-ந் தேதி விசைப்படகு ஒன்றில் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் 12 பேர் உதவியாக படகில் சென்றனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நீந்த தொடங்கினார். நேற்று காலை 9 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வந்து தனது நீச்சல் சாதனை பயணத்தை நிறைவு செய்தார். சுமார் 28 கிலோமீட்டர் தூர கடல் பாதையை 9 மணி நேரத்தில் கடந்து சாதனை செய்துள்ளார். இவரை ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே. போஸ் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.