தமிழக செய்திகள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில்ஓசூர் மாணவ, மாணவிகள் சாதனை

தினத்தந்தி

ஓசூர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த 45 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கட்டா பிரிவில் 23 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றனர். குமித்தோ பிரிவில் 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து, சாதனை மாணவர்களுக்கு ஓசூர் டென்னிஸ் கிளப்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செயலாளர் திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் பசவலிங்கராஜ், கராத்தே மாஸ்டர் ரவி, பாப்பண்ணா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து