தமிழக செய்திகள்

நிதி வழங்கும் உரிமை பறிப்பு

பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் நிதி வழங்கும் உரிமை பறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.

தினத்தந்தி

ஆத்தூர்

ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கலைச்செல்வி. இவர் சுயேட்சையாக வெற்றி பெற்று அ.தி.மு.க.வில் இணைந்தார். சமீபத்தில் இவர் தி.மு.க.வில் இணைந்தார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றது முதல் ஊராட்சி நிர்வாகத்தில் ஏராளமான தவறுகள் நடைபெறுவதாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக்கூறி அவரது நிதி வழங்கும் உரிமையை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் நேற்று பறித்து கடிதம் வழங்கினார். இதன்மூலம் பைத்தூர் ஊராட்சியில் பணிகள் செய்வதற்கு நிதி தர வேண்டும் என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மட்டுமே நிதி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு