தமிழக செய்திகள்

ஏரிக்கரையில் வேலமரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் வேலமரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயலவாடி கிராமத்தில் ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையில் வேல மரங்கள், புங்கன், வேப்பமரங்கள் இருந்தன. சம்பவத்தன்று வேலமரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடமும், வனச்சரக அலுவலர்களிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்