தமிழக செய்திகள்

நடிகர் சிவக்குமார், கார்த்தி சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவக்குமார், கார்த்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவ்வப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் கார்த்தி மற்றும் குடும்பத்தினர் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கார்த்தி படிப்பாதையிலும், சிவக்குமார் மின்இழுவை ரெயிலிலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரத்துக்கு வந்து, அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கார்த்தி மற்றும் சிவக்குமாருடன் செல்பி எடுத்து கொண்டனர். கார்த்திக்கிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அதையொட்டி பழனியில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்