தமிழக செய்திகள்

நடிகர் விஜய் மீண்டும் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்-கிருஷ்ணசாமி பேட்டி

ஆளுங்கட்சியினர் நடிகர் விஜயைப் பார்த்து அஞ்சுகின்றனர் என்று கிருஷ்ணசாமி கூறினார்.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி நடக்கிறது. கரூரில் மிகவும் குறுகலான பகுதியில் நடிகர் விஜய் பிரசாரம் செய்ததால்தான் நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்தனர்.

அவர் மக்களை சந்தித்து பேசுவதற்கு சரியான இடத்தை தமிழக அரசு ஒதுக்கி தரவில்லை. ஆளுங்கட்சியினர் நடிகர் விஜயைப் பார்த்து அஞ்சுகின்றனர். கரூர் சம்பவத்தில் இருந்து நடிகர் விஜய் மீண்டு வந்து பொதுமக்களை சந்திக்க வேண்டும். அவர் மீண்டும் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு