தமிழக செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று பகல் 12 மணி வரை 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 986 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால் பகல் 12 மணிக்கு பிறகு மேலும் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,981 கனஅடி வீதம் கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 83 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு