தமிழக செய்திகள்

8 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு: தமிழகத்தில் 22 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 8 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேற்று புதிதாக 17 ஆயிரத்து 125 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 12 பேரும், பெண்கள் 10 பேரும் உள்பட 22 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் உள்பட 8 மாவட்டங்களில் மட்டும் தொற்று பதிவாகி உள்ளது. 30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 10 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் தொடர்ந்து 29-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 228 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

24 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு