தமிழக செய்திகள்

‘நீட்’ தேர்வை எதிர்த்து அறப்போராட்டம் தொடரவேண்டும் - கி.வீரமணி அறிக்கை

நீட் தேர்வை எதிர்த்து அறப்போராட்டம் தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது விஞ்ஞான அறிவோ, மற்ற பாடங்களைப்பற்றிய செறிவோ, துளியும் தேவையின்றி இந்த நீட் தேர்வு அமைக்கப்பட்டுள்ளதால், இதன்மூலம் திறமை பளிச்சிடுவதாக கூறுவது மின்மினியை மின்சாரம் என்று வர்ணிப்பது போன்ற ஒரு வகை மோசடியே ஆகும். 12 ஆண்டுகள் படித்த படிப்பு(பிளஸ்-2 வகுப்பு வரை) குப்பையில் தூக்கி எறியப்பட்டதுதான் தகுதி, திறமையா?.

நீட் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடுதான் குரல் கொடுக்கிறது என்றால், இப்போது நீட் தேர்வின் கொடுமையும், புரட்டும் உலகுக்கே தெரிய தொடங்கிவிட்டது. நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இந்த மோசடித்தனத்தை ஒழிக்க எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், எத்தனை வலிமைகளை கூட்டி வந்தாலும், நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்