தமிழக செய்திகள்

வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை- செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்

வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பணமில்லா பரிவர்த்தனை

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (யு.பி.ஐ), மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்த உள்ளதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேற்கண்டவாறு பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டது.

அனைத்து வட்டாரங்களிலும்

தற்போது இது அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவுபடுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மைய பணியாளர்கள் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, விற்பனை இட கருவிகள் அல்லது ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படுத்தப்படும் இந்த பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு