தமிழக செய்திகள்

வேளாண் கருவிகள், உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி

பேராவூரணி வட்டாரத்தில் வேளாண் கருவிகள், உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

பேராவூரணி;

வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில், பேராவூரணி வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகள், பேட்டரி ஸ்பிரேயர், இனக்கவர்ச்சி பொறி, சான்று பெற்ற உளுந்து விதை, தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் (பொ) ராணி தலைமை தாங்கினா. அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கினார்.நிகழ்ச்சியில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா, கார்த்திகேயன், கவிதா, மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை