சென்னை,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என திமுக எம்.பி.க்.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு திமுக எம்.பி.க்.கள் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.