சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தலுக்கு தயாராகுவது குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.