கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இன்று காஷ்மீருக்கு வரும் விமானங்கள் மற்றும் காஷ்மீரில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் பல இடங்களில் தொடர்கிறது. பனிப்பொழிவு பார்வையை 500 மீட்டருக்குக் குறைத்ததால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 68 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் பனிப்பொழிவு மற்றும் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக பாரமுல்லா-பனிஹால் ரெயில் பாதையின் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து