தமிழக செய்திகள்

அமெரிக்க பயணியிடம் இருந்த துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு தயாராக இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரூ ஜெர்ட் ஏர்சின் என்பவரிடம் துப்பாக்கி தோட்டா இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபரிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தோட்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்