தமிழக செய்திகள்

ஆடி மாத 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி பரமத்திவேலூர் பேட்டை, புதுமாரியம்மன், வேலூர் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பேட்டை பகவதியம்மன் மற்றும் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு சாமிக்கு படைக்கப்பட்ட கூழ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது