தமிழக செய்திகள்

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

மாங்காடு, சீனிவாசா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), பருத்திப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (29), நேற்று முன்தினம் மனைவியின் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு வீட்டுக்கு சுரேஷ் மது போதையில் வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை தாக்கியதாகவும் அதில் அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. இதனால் பதறி போன சுரேஷ் வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார்.

தற்கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்தம் போட்டதைடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்