தமிழக செய்திகள்

ஆடு மீது பைக் மோதிய பிரச்சனையில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி மாவட்டம் கே.உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி ,

திருச்சி மாவட்டம் கே.உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். விவசாயி ராஜ்குமார் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜான் பிரிட்டோவின் பைக், ஆட்டின் மீது மோதியுள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்ற ஜான் பிரிட்டோ, துப்பாக்கியுடன் வந்து, ராஜ்குமாரை மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில், ஜான் பிரிட்டோவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 2 தோட்டாக்களுடன் கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு