தமிழக செய்திகள்

பயணிகளின் நகைகளை திருடிய ஆந்திர பெண் கைது

ஓடும் ரெயில்களில் பயணிகளின் நகைகளை திருடிய ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

காட்பாடி

மைசூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தது.

அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கி சந்தேகப்படும் வகையில் சென்ற பெண்ணை காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் என்றும் அவர் பயணிகளிடம் 8 பவுன் நகைகளை திருடி பையில் வைத்திருப்பது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு