தமிழக செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: அங்கோலா நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வருகை

சென்னை:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும்.

இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக அங்கோலா நாட்டு செஸ் வீரர்கள் தமிழகம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னத்திற்கு (தம்பி) அருகில் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு