தமிழக செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆஞ்சநேயர் சிலை உடைப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆத்தீஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆத்தீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் அங்கு விநாயகர், முருகன் என சிறிய அளவில் தனி சன்னதிகள் உள்ளன. அங்குள்ள ஆலமரத்தடியில் 1 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. அந்த கோவிலில் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ காலங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று வழக்கம் போல கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு சுற்றி வரும்போது கோவிலின் பின்புறம் ஆலமரத்தடியில் இருந்த ஆஞ்சநேயர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆஞ்சநேயர் சிலையை உடைத்த மர்ம நபர் யார்? என்பது தெரியவில்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு