தமிழக செய்திகள்

அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நாங்குநேரி,

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தெகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

3 தெகுதிகளிலும் 21ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை தெடர்பாக தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கெடுக்கும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை