நாங்குநேரி,
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தெகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
3 தெகுதிகளிலும் 21ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை தெடர்பாக தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கெடுக்கும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.