சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தாமரை சின்னத்தில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவரும், மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கைக் காக்கவும், நமது வீட்டுப் பெண்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கிடைக்கவும், தமிழகம் முழுவதும் பெருகியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும், தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.