தமிழக செய்திகள்

ஆனி அமாவாசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசேஷ நாட்கள், அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் நேற்று ஆனி அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்கள் ஒரே நாளில் வந்ததால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்தனர்.

இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருக பெருமானுக்கு 6 கால பூஜைகள் நடைபெற்றது.

முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி- தெய்வானை மற்றும் தன்னாசியப்பன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்