தமிழக செய்திகள்

குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் கடந்த ஆண்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி என அறிவிப்பு வெளியானது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?