தமிழக செய்திகள்

மின்மாற்றியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

திருவட்டார் அருகே மின்மாற்றியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

திருவட்டார், 

திருவட்டாரை அடுத்த தோட்டவாரம் பாலதோப்புவிளையைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஷெர்லின் (வயது 29), டெம்போ டிரவர். இவரது நண்பர் மூவாற்றுமுகம் வள்ளங்குழிவிளையைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் விஜின் (25). இருவரும் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜின் ஓட்டினார். ஷெர்லின் பின்னால் உட்கார்ந்து இருந்தார். வீயன்னூர் தோட்டத்துவிளை அருகே வரும்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் ரோட்டோரம் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு ஷெர்லினை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விஜின் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலயில் நேற்று சிகிச்சை பலனின்றி விஜின் பரிதமாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு