தமிழக செய்திகள்

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், துணை பொது மேலாளர் (சேப்டி அண்ட் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் (மெக்கானிக்கல்) அசோகன், முதுநிலை மேலாளர் (பேப்பர் மெஷின்) முத்துராமன், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், காவல் ஆய்வாளர் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி வைத்தியநாதன், துணை மேலாளர் (பாதுகாப்பு) மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலிராஜன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து