சென்னை,
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வார இறுதி நாளான இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. சென்னை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திண்டுக்கல, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பேரூராட்சிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறப்படுவதாகவும், அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில் இந்த மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையால் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சி அலுவலக வளாகங்களில் பரபரப்பு நிலவுகிறது. சோதனை தொடர்பான முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய பிறகு தெரியவரும்.