தமிழக செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினத்தந்தி

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீர் நிர்வாகம் குறித்த ஆலோசனை வழங்க காவிரி கண்காணிப்பு குழு என்ற துணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இதுவரை 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கு நிரந்தர தலைவர் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்

உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். நியாயமான கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்காத பட்சத்தில், தமிழகம் வழியே கடலில் சென்று கலக்கும் காவிரி உபரி நீரை தடுத்து மேகதாதுவுக்கு கீழ் உள்ள தமிழக எல்லையான ராசிமணலில் தமிழக அரசு அணை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசனத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஆணையத்திடம் அனுமதி கேட்டுப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்போம்... மேகதாது அணை கட்டுமானத்தை நிறுத்தி வைப்போம் எனும் தலைப்பில் பிரசுரங்களை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன் வெளியிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்