தமிழக செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா ? - அரசுப் பஸ்களில் முன்பதிவு தொடங்கியது...!

தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவுப் பஸ்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இதன்மூலம் கடைசிகட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்டோபர் 24-ந்தேதி) சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதன்படி பஸ்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் அக்டோபர் 21-ந்தேதிக்கான ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக 'டிக்கெட்'டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது