தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 24.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

செம்பியம்: சந்திரபிரபு காலனி, தனிகாசலம் நகர், மூலக்கடை, அன்னை சத்யா நகர், வெங்கடேஸ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கே.எச். சாலை, நாகையா தோட்டம், முனுசாமி தெரு, பாளையக்காரர் தெரு, யுனைடெட் இந்தியா நகர், கே.கே. நகர், செட்டி தோட்டம்.

பல்லாவரம்: கீழ்க்கட்டளை, பாலமுருகன் நகர், அம்பாள் நகர், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே. நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல், இன்ஜினியர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், எஸ். கொளத்தூர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், அன்பு நகர், சுய உதவி தொழில்கள்.

எண்ணூர்: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு பகுதி, எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், சரஸ்வதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர் ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.