தமிழக செய்திகள்

ஓசூரில்இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

ஓசூர்:

ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஸ்பா சென்டர் பெயரில், இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெங்களூரு ஆஸ்டின் டவுன் கிழக்கு சாலை பகுதியை சேர்ந்த ரேகா (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.