தமிழக செய்திகள்

மத்தூர் அருகேலாரியில் மண் கடத்திய 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி

மத்தூர்:

மத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தொகரப்பள்ளி வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 4 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மண்ணை கடத்தியது பர்கூர் தொகரப்பள்ளியை சேர்ந்த பாலராமன் (வயது 52), தொகரப்பள்ளி மணி (75) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தொகரப்பள்ளியை சேர்ந்த பிரபு (31) என்பவரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 2 டிப்பர் லாரிகள், 4 யூனிட் மண் பறிமுதல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்