தமிழக செய்திகள்

முன்விரோதத்தில் பூஞ்செடி கடைக்கு தீ வைத்தவர் கைது

முன்விரோதத்தில் பூஞ்செடி கடைக்கு தீ வைத்தவர் கைது

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 35). பூஞ்செடி மற்றும் மண்பானை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழ்செல்வியின் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கடையில் இருந்த பூஞ்செடி மண்பானைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தமிழ்செல்வி மொளசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக விட்டம்பாளையத்தை சேர்ந்த குமார் (38) என்பவர் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு