தமிழக செய்திகள்

பேரிகை அருகேஸ்கூட்டரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே எலுவபள்ளி ஜங்ஷன் பகுதியில் பேரிகை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஸ்கூட்டரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரித்தில் ஸ்கூட்டரில் வந்தவர் சூளகிரி கீழ்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 35) என்பதும், கர்நாடக மாநிலம் மாஸ்தியில் இருந்து சூளகிரிக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமார கைது செய்த போலீசார் ஸ்கூட்டருடன் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...