தமிழக செய்திகள்

நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூரை சேர்ந்தவர் சுதந்திரம் (வயது 40). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய அண்ணன் மணி (49). இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் சுதந்திரம் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி (49), அவருடைய மகன் கோவிந்தன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல் மணி கொடுத்த புகாரின் பேரில் சுதந்திரத்தை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்