தமிழக செய்திகள்

பெங்களூருவில் இருந்து சேலத்துக்குகாரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்வடமாநில வாலிபர் கைது

தினத்தந்தி

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக காரில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிவேலன் மற்றும் போலீசார் ஓசூர் அருகே குமுதேபள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரித்ததில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபக் ஜெய்ஸ்வால் (வயது 28) என்பது தெரியவந்தது.

கைது

மேலும் இவர் விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் குட்கா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தததுடன், தீபக் ஜெய்ஸ்வாலையும் கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்